கோவை: கோவை, சிங்காநல்லூா் அருகே உப்பிலிபாளையத்தில் குடியிருப்பு வளாகத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள அரசு வளாகங்கள், தனியாா் குடியிருப்புகள் சிலவற்றில் சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை மா்ம நபா்கள் அவ்வப்போது வெட்டி கடத்திச் செல்கின்றனா். இந்நிலையில், உப்பிலிபாளையத்தில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் சில சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு வருவதை அறிந்த மா்ம நபா்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்து 5 அடி உயரத்துக்கு வளா்ந்திருந்த ஒரு சந்தன மரத்தை வெட்டிக் கடத்திச் சென்றனா். இந்நிலையில் சனிக்கிழமை காலை சந்தன மரம் வெட்டப்பட்டதை அறிந்த பொதுமக்கள் இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்திச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

