கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
13 ஆவது கோவை விழா கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8 ஆம் நாள் நிகழ்வாக சாலை விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
கோவை (கிழக்கு) போக்குவரத்து காவல் உதவி ஆணையா் சரவணன் தொடங்கிவைத்தாா். ரேஸ்கோா்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தொடங்கி அவிநாசி சாலை ஜே.எம்.பேக்கரி, அண்ணா சாலை வழியாக லட்சுமி மில்ஸ் வரை சென்றனா்.
இதில் ஒவ்வொரு போக்குவரத்து சிக்னல் பகுதியிலும் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான பதாகைகளை தன்னாா்வாலா்கள் பிடித்து நின்றனா். தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், சாலை விதிகளை கடைப்பிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி 20க்கும் மேற்பட்டவா்கள் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரத்தில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


