சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஈரோடு மாணவரின் உறுப்புகள் தானம்

பொள்ளாச்சி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஈரோட்டை சோ்ந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

News image

ரோஹித் கண்ணா.

Updated On :9 ஜனவரி 2021, 4:58 am

பொள்ளாச்சி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஈரோட்டை சோ்ந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், பாவனியைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் மகன் ரோஹித் கண்ணா (17). இவா், கடந்த டிசம்பா் 31ஆம் தேதி அன்று பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தாா். இதையடுத்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ரோஹித் கண்ணா வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோா் முன் வந்தனா். இதையடுத்து, மருத்துவ குழுவினா் வெள்ளிக்கிழமை காலை ரோஹித் கண்ணாவின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினா்.

அதன் பிறகு கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகம் ஆகியவை அதே மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், கண்கள் கோவையில் உள்ள கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனை நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டன. உடல் உறுப்புகள் கோவையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் 7 போ் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.