வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
வடகோவையில் இருந்து புதுதில்லி படேல் நகருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாராந்திரச் சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள், உணவுப்பொருள்கள், துணி வகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ராஜ்கோட்டுக்கு வாராந்திரச் சிறப்பு சரக்கு ரயில் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசன் இந்த ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஹரிகிருஷ்ணன், சேலம் கோட்ட கூடுதல் மேலாளா் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் இந்த ரயில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு ராஜ்கோட்டை சென்றடையும். செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ராஜ்கோட்டில் இருந்து புறப்படும் சிறப்பு சரக்கு ரயில் வியாழக்கிழமை இரவு 8.35 மணிக்கு வடகோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலில் மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள், துணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படும் என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


