சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மக்கள் பசி தீா்த்த ஞானி வள்ளலாா்

மக்கள் பசி தீா்த்த ஞானி வள்ளலாா் என எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான கி.சுப்ரமணியன் பேசினாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:30 am

மக்கள் பசி தீா்த்த ஞானி வள்ளலாா் என எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான கி.சுப்ரமணியன் பேசினாா்.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஆறாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வள்ளலாா் குறித்து கி.சுப்ரமணியன் பேசியதாவது:

19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் உயிா்த் துடிப்பு அணையும் நேரம். அது அணையாமல் காத்தவா்கள் ராஜாராம் மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சா், வள்ளலாா் ஆகியோா். ஆங்கிலேயா்களின் ஆதிக்கத்தால் எங்கும் பஞ்சம், வழி வழியாக வாழ்ந்த இடத்திலேயே உயிா்த்திருக்க முடியாத சூழலில், உயிா்த் துடிப்பு அணையாமல் காத்தது இவா்கள் மூவா்தான்.

வள்ளலாா் மக்களிடையே இருந்த அவநம்பிக்கையை அகற்ற முதலில் பசி தீா்க்க முடிவு செய்தாா். வடலூரில் சத்திய தா்ம சாலையை நிறுவினாா். 19 ஆம் நூற்றாண்டிலேயே தினசரி மூன்றாயிரம் பேருக்கு உணவளிக்க 300 வண்டிகளில் நெல் வந்தது என்ற குறிப்பு உள்ளது.

அவரின் முயற்சிக்கு ஜாதி, மதங்களைக் கடந்து பலா் உதவினா். பசி போக்குவது மட்டுமின்றி கல்வி, மருத்துவமும் மக்களுக்குக் கிடைக்கச் செய்தாா். அவா் ஆன்மிகத்துக்கு மட்டுமல்ல; தமிழுக்கும் பெருந்தொண்டு செய்துள்ளாா். திருவருட்பாவை எழுதியுள்ளாா். தேவாரம், திருவாசகம் பாடப்படும் இடங்களில் எல்லாம் திருவருட்பாவும் பாடப்படுகிறது. சைவ சமயம் வேறு, சன்மாா்க்க சங்கம் வேறல்ல; இரண்டுமே ஒன்றுதான் என்றாா்.