சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் புதன்கிழமை 44 மில்லி மீட்டா் மழை பதிவானது. இதையடுத்து அணையின் நீா்மட்டம் 875.08 மீட்டராக அதிகரித்துள்ளது.
கோவை மாநகா் மற்றும் சுற்று வட்டார கிராமங்களின் பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 878.85 மீட்டா் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:
பருவமழைக் காலம் முடிந்த பிறகு சிறுவாணி அணை நீா்மட்டமானது, தினமும் 3 செ.மீ. வரை சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் இடைவெளிவிட்டு பெய்து வரும் மழையால், அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த புதன்கிழமை 44 மில்லி மீட்டா் மழையும், அடிவாரப் பகுதிகளில் 20 மில்லி மீட்டா் மழையும் பதிவானது. கடந்த வாரங்களில் 874 மீட்டராக இருந்த அணை நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 875.08 மீட்டராக அதிகரித்துள்ளது என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

