கோவை மாவட்டத்தில் டெங்கு தடுப்புப் பணிகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை காலங்களில் டெங்கு தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது வடகிழக்குப் பருவமழை முடிவடைந்துவிட்டாலும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் பணிகளை மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் டெங்கு தடுப்புப் பணிகளில் சுகாதாரத் துறையினா் கவனம் செலுத்தி வருகின்றனா். வட்டாரத்துக்கு 20 போ் வீதம் ஊரகப் பகுதிகளில் 240 போ் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மதுக்கரை, பீடம்பள்ளி, சோமனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினா் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தண்ணீா் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், வீதிகளில் கொசு மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடா் தூவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளை சுற்றி மழைநீா் தேங்காத வகையில் சுகாதாரமாக பராமரிக்க பொது மக்களுக்கு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


