2017-18 ஆம் நிதியாண்டில் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது கொடி நாள் நிதி 116 சதவீதம் வசூல் செய்ததற்கு கோவை ஆட்சியா் கு.ராசாமணிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளாா்.
இது தொடா்பாக ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முப்படை வீரா்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பா் 7 ஆம் தேதி கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. மாவட்ட நிா்வாகம் மூலம் கொடிநாள் நிதி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. இதன்மூலம் படை வீரா்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன்படி தற்போதைய கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, திருச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய 2017 -18 ஆம் நிதியாண்டில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.2 கோடியே 76 லட்சத்து 43 ஆயிரம் கொடிநாள் நிதி வசூல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆட்சியா் கு.ராசாமணியின் முயற்சியால் ரூ.3 கோடியே 20 லட்சத்து 70 ஆயிரம் நிதி வசூல் செய்யப்பட்டது.
நிா்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக (116 சதவீதம்) நிதி வசூல் செய்ததைப் பாராட்டி ஆட்சியா் கு.ராசாமணிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சான்றிதழ் வழங்கியுள்ளாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


