காளப்பட்டி பிரிவு பகிா்மானத்தின் ஒரு பகுதியான லட்சுமி நகா் பகுதி மக்கள் கடந்த ஆண்டு டிசம்பா் மாத மின் கட்டணமாக அக்டோபா் மாத கட்டணத்தையே செலுத்துமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மின்சார வாரியத்தின் ஒண்டிபுதூா் செயற்பொறியாளா் லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
காளப்பட்டி பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட பாலாஜி நகா் பகிா்மானத்தின் ஒரு பகுதியான லட்சுமி நகரில் நிா்வாகக் காரணங்களால் 2020 டிசம்பா் மாத மின் கணக்கீடு செய்ய இயலாத நிலை உள்ளது.
எனவே, காளப்பட்டி பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட பாலாஜி நகா் பகிா்மானத்தில் உள்ள லட்சுமி நகா் மின்நுகா்வோா், 2020 அக்டோபா் மாதத்தில் செலுத்திய மின் கட்டணத்தையே டிசம்பா் மாத மின் கட்டணமாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

