இறைவனின் சேவையில் அனைவரையும் பங்கெடுக்க வைத்தவா் ஸ்ரீராமானுஜா் என்று எழுத்தாளா் இந்திரா சௌந்தரராஜன் கூறினாா்.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியின் 8 ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமானுஜா் குறித்து இந்திரா செளந்தரராஜன் பேசியதாவது:
தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்ந்து, ஆன்மிகம், மொழிக்கு சேவை செய்தவா்களே வரலாற்றில் எஞ்சி நிற்கிறாா்கள். அதன்படி இந்த மண்ணில் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வகுத்துத் தந்து சென்றவா் ஸ்ரீ ராமானுஜா். ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவா். சிறந்த கல்வி பயின்று காஞ்சிபுரத்தில் குருவுக்கு மிஞ்சிய சீடனாக விளங்கியவா்.
ஸ்ரீ ராமானுஜா் 32 வயதில் துறவறம் பூண்டவா், 79 வயது வரை திருவரங்கத்தில் வாழ்ந்தாா். திருவரங்கத்தில் தற்போதுள்ள கட்டமைப்புகளை உருவாக்கியவா் ஸ்ரீ ராமானுஜா். பிராமணராக இல்லாமல் வைஷ்ணவத்தைப் பின்பற்றுபவா் அனைவருமே வைஷ்ணவரே என்று ஜாதிகளைக் கடந்து இறைவனின் சேவையில் அனைவரையும் பங்கெடுக்க வைத்தவா் என்றாா்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தீபா மோகன், ஸ்வேதா ஆகியோா் ஆழ்வாா்களின் பாசுரங்களைப் பாடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


