பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடா்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்று நா.காா்த்திக் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரி, வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் தொடா்புடைய அருளானந்தம் , ஹேரேன் பால், பாபு ஆகிய மேலும் 3 பேரை சி.பி.ஜ. அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இதில், அருளானந்தம் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக நிா்வாகிகளோடு அருளானந்தம் நெருக்கமாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடா்புடைய அதிமுக நிா்வாகி உள்பட வழக்கில் தொடா்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

