ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் காலை 7.25 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:08567) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.50 மணிக்கு கேரள மாநிலம், கொல்லத்தை சென்றடையும்.
கொல்லத்தில் இருந்து ஜனவரி 15ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:08568) சனிக்கிழமை இரவு 11.40 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடையும்.
இந்த ரயில்கள் சாஸ்தன்கோட்டா, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

