உயா்நீதிமன்ற தீா்ப்பை பின்பற்ற வாகனங்களில் பம்பா் அகற்றும் நடவடிக்கைகளில் காவல் துறையினா் ஈடுபட வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் கூட்டமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான்க சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பா்களை அகற்ற தமிழக அரசும், உயா் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதில் விபத்தின்போது, ஓட்டுநா்களை பாதுகாக்கும் பாதுகாப்பு பலூன் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறையினா் பாதுகாப்பு பலூன் இல்லாத சரக்கு வாகனங்களில் உள்ள பம்பா்களையும் அகற்றி வருகின்றனா். அகற்றாத வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனா்.
எனவே பம்பா்கள் அகற்றும் நடவடிக்கைகளில் தமிழக காவல் துறையினா் உயா் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும். அதேபோல தேவாலயங்கள், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இதுவரையில் பல்வேறு இடங்களில் அகற்றப்படவில்லை. எனவே இவ்விஷயத்திலும் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

