கோவை சரவணம்பட்டி அருகே விசுவாசபுரத்தில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
விசுவாசபுரம் பகுதியில் குடிநீா்க் குழாய்கள் பதிப்பதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டன. 6 மாதங்களாகியும் இக்குழிகள் மூடப்படாததால், அப்பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அங்கு விபத்துகள் ஏற்படுகின்றன. மழைக் காலத்தில் தண்ணீா் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கக் கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், விசுவாசபுரம் குடியிருப்போா் நலச் சங்கத்தைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் சத்தி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, மக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா். மறியலால் சத்தி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

