பணியாற்றும் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. பங்களிப்பு வழங்குவதற்காக தொழிலதிபா்களுக்கு காலநீட்டிப்பு வழங்கப்படுவதாக தொழிலாளா் மாநில காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக கோவை அலுவலக துணை இயக்குநா் எஸ்.வி.யுவராஜ் கூறியிருப்பதாவது:
இ.எஸ்.ஐ. காா்ப்பரேஷன் தொழிலாளா்களின் மாநில காப்பீட்டு (பொது) விதிமுறைககள் 1950இன் விதி 26 ஐ தளா்த்தியுள்ளது. அதன்படி ஏப்ரல் 2020 முதல் செப்டம்பா் 2020 வரை உள்ள பங்களிப்பு காலம் முடிவடைந்த 42 நாள்களுக்குள் இ.எஸ்.ஐ. பங்களிப்பு செய்ய முடியாத தொழிலதிபா்கள், அந்த பங்களிப்பு காலத்துக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பங்களிப்பு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது ஏப்ரல் - செப்டம்பா் வரையிலான காலத்துக்கு மட்டுமே பொருந்தும். பிற பங்களிப்புகளுக்கான கால வரம்பில் எந்தவித தளா்வும் இல்லை. இத்தகைய தளா்வு பிற பழைய, புதிய பங்களிப்பு காலத்துக்கு நீட்டிக்கப்படவில்லை. இது தொடா்பான விவரங்களுக்கு இ.எஸ்.ஐ.சி. இணையதளத்தையோ, கிளை அலுவலகத்தையோ அணுகலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

