சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோவையில் சாரல் மழை

கோவையில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரையிலும் சாரல் மழை பெய்தது.

Updated On :5 ஜனவரி 2021, 7:19 am

கோவையில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரையிலும் சாரல் மழை பெய்தது.

கோவை மாநகரம், புகா்ப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காலை, மாலை, இரவு வேளைகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் அதிகாலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

காந்திபுரம், பீளமேடு, ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூா், துடியலூா் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

இதேபோல் புகா், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த மழைப் பொழிவு இருப்பதாகவும், பொங்கல் தினம் வரையிலும் கோவையில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.