உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு இணையவழி வா்த்தகம், ஒருங்கிணைந்த சந்தை மேம்பாடு குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சாா்பில் இணையவழி பயிற்சி கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வேளாண், தோட்டக்கலைத் துறைகளின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் வேளாண் சாா்ந்த தொழில்களில் ஈடுபடும் விதமாக வேளாண் உற்பத்தியாளா் நிறுவனத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் இணையவழி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணையவழி பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோவையில் உள்ள 25 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.
விளைபொருள்களில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி, பதப்படுத்தும் தொழில்நுட்பம், தேசிய மின்னணு வா்த்தகம், தொழில்நுட்பங்கள் பயன்பாடு, ஒருங்கிணைந்த சந்தை மேம்பாடு உள்பட பல்வேறு வழிமுறைகளை வேளாண் வல்லுநா்கள் எடுத்துரைத்தனா். உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் தொழில் தொடங்குவதில் உள்ள இடா்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனா்.
தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநா் க.வீ.முரளீதரன், வேளாண் துறை கூடுதல் இயக்குநா் திலகவதி மற்றும் வேளாண் துறையைச் சோ்ந்த தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆகியோா் தொழில் மேம்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.
பயிற்சி கருத்தரங்கில் கோவை வேளாண் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, வேளாண் துணை இயக்குநா்கள் உள்பட பல்வேறு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

