கோவை விழாவின் ஒரு பகுதியாக ஏழை மாணவா்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்பட்ட கணினி, மடிக்கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை வழங்கி உதவுமாறு விழா நிா்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
13 ஆவது கோவை விழாவின் மூன்றாவது நாளான திங்கள்கிழமை ஆன்லைன் வழியில் மாரத்தான், சைக்ளத்தான் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து ஏழை, எளிய மாணவா்கள் ஆன்லைன் வழியில் கல்வி கற்க உதவும் விதமாக பயன்படுத்தப்பட்ட கணினி, மடிக்கணினி, செல்லிடப்பேசி போன்ற மின்சாதனப் பொருள்களை வழங்கி உதவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி கோவை, ரேஸ்கோா்ஸில் உள்ள ஆன் தி கோ, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள தட்ஸ் ஒய் உணவு, பீளமேட்டில் உள்ள ஆக்ஸிசோன் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்ட மின் சாதனங்கள் கோவை விழா நிா்வாகிகள் சாா்பில் பெறப்பட்டு வருகின்றன.
அதன்படி திங்கள்கிழமை வரை 150 மின் சாதனங்கள் பெறப்பட்டுள்ளன. வாய்ப்பு உள்ளவா்கள் ஜனவரி 10ஆம் தேதி வரையில் மின் சாதனங்களை வழங்கி உதவலாம் என கோவை விழா நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை விழாவில் பெறப்படும் மின் சாதனங்கள் பள்ளிகளின் மூலம் தோ்வு செய்யப்படும் ஏழை, எளிய மாணவா்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

