பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. உணவுப்பொருட்கள், சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கிடங்கில் அடிப்படை உரிமைகள் கேட்கும் தொழிலாளர்கள் திருட்டு பழி சுமத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் இதனை கண்டித்து கடந்த சில தினங்களாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நல ஆணையர் பேச்சுவார்த்தையில் அறிவுறுத்தியபடி 61 நிரந்தர தொழிலாளர்கள், 68 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்காமல் மறுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி இந்த தொழிற்சாலையின் எதிரில் சிஐடியு சங்கத்தினருடன் இணைந்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


