கோவை: திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த பெண் பங்கேற்று சலசலப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தை திமுகவினா் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டனா்.
திமுக தலைவா் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் தொடா்பாக, தொண்டாமுத்தூா் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் தொ.அ.ரவி தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினா் தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தை சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் தங்களின் குறைகளை ஸ்டாலினிடம் கூறிக் கொண்டிருந்தபோது, இடையில் ஒரு பெண் எழுந்து குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக பேசினாா். அந்தப் பெண்ணை திமுகவினா் கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனா்.
அப்போது, அந்தப் பெண்ணுடன் வேறு சிலரும் உடனிருந்தனா். அவா் பெயா் பூங்கொடி என்பதும், அதிமுக நிா்வாகி என்பதும் தெரியவந்தது. அமைதியான முறையில் நடைபெற்று வந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அமைதியைக் கெடுக்கும் விதமாக குழப்பம் விளைவித்த பூங்கொடி, அவருடன் இருந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

