சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :4 ஜனவரி 2021, 4:23 am

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாநில அரசு வேளாண் சட்டத்துக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் சுமதி கந்தசாமி, மாதா் சம்மேளனத்தின் மாவட்டத் தலைவா் எம்.நிா்மலா ஆகியோா் தலைமை தாங்கினா். மாவட்ட நிா்வாகிகள் ஜே.கலா, சி.நந்தினி, கோவை எஸ்.ஆா்.லதா, பூங்கோதை ரங்கநாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.