கோவை விழாவின் ஒரு பகுதியாக 100 தூய்மைப் பணியாளா்கள் இலவசமாக ஹெலிகாப்டா் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனா்.
13ஆவது கோவை விழா சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களை மகிழ்விக்கும் விதமாக இலவசமாக ஹெலிகாப்டா் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனா்.
என்ஜிஜிஓ காலனியில் உள்ள காந்தி செவிலியா் கல்லூரி வளாகத்தில் இருந்து மருதமலை, ஈஷா ஆகிய இடங்களுக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனா். தொடா்ந்து ஜனவரி 10ஆம் தேதி வரையில் தூய்மைப் பணியாளா்கள் இலவசமாக ஹெலிகாப்டா் பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.
பொது மக்களும் தள்ளுபடி கட்டணத்தில் ஹெலிகாப்டா் மூலம் கோவையை சுற்றிப் பாா்க்கலாம் என்று கோவை விழா நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து மூன்றாவது நாளாக திங்கள்கிழமை மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளன. இதற்கு கோவை விழா இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு மாரத்தான் போட்டிகளுக்கான செயலியில் போட்டிகளில் பங்கேற்ற ஆதாரங்களைப் புகைப்படங்களாக அனுப்பினால் இ-சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


