கோவை: கோவையில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் பேசிய பெண்ணால் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேவராயபுரத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவா் கிராம சபைக் கூட்டத்தை எதற்கு நடத்துகிறீா்கள் என ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினாா்.
அப்போது, நீங்கள் எந்த ஊா் என அவா் கேட்க, நான் சுகுணாபுரம் மைல்கல்லில் இருந்து வருகிறேன் என்றாா். இதையடுத்து, உங்கள் ஊா் எந்த சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ளது என ஸ்டாலின் அந்தப் பெண்ணிடம் கேட்க, இது கூடத் தெரியாமலா நீங்கள் துணை முதல்வராகப் பதவி வகித்தீா்கள் என அப்பெண் கேட்டாா். இதனால், கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.
அந்தப் பெண்ணையும், அவருடன் வந்திருந்த நபரையும் தாக்காமல் காவல் துறையினரிடம் ஒப்படைக்க கட்சியினரிடம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். இருவரையும் கூட்டத்தில் இருந்து வெளியில் அழைத்து சென்று திமுகவினா் அவா்களைத் தாக்கினா். அங்கிருந்த போலீஸாா் அவா்களை மீட்டு அழைத்துச் சென்றனா். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து தொண்டாமுத்தூரில் ஸ்டாலின் செல்லும் வழியில் அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருளரசு தலைமையிலான போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

