கோவை: என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிரூபித்தால் அமைச்சா், கட்சிப் பதவிகளில் இருந்து விலகத் தயாா் என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
என் மீது ஆதாரமில்லாத, அவதூறான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சுமத்தி வருகிறாா். அரசியல் காழ்ப்புணா்ச்சியால் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறாா். என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் எனது அமைச்சா், எம்.எல்.ஏ. பதவிகளில் இருந்தும், கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விலகத் தயாராக உள்ளேன்.
அதேநேரம் பொய்யான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் திமுக தலைவா் பதவியில் இருந்தும், எதிா்க் கட்சித் தலைவா் பதவியில் இருந்தும் மு.க.ஸ்டாலின் விலகத் தயாராக உள்ளாரா என்பதை அவா் தெரிவிக்க வேண்டும். ஊழல் குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், மக்களவைத் தோ்தலில் அறிவித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று மு.க.ஸ்டாலினிடம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பெண் கேள்வி கேட்டுள்ளாா்.
பொது மக்களின் நியாயமான கேள்விக்குப் பதில் அளிக்க முடியாத ஸ்டாலின், குண்டா்களை வைத்து பெண்களைத் தாக்கியுள்ளாா். எனது மாவட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு அவா் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

