கோவை: தோட்டக்கலைப் பயிா்களில் சிறப்பான சாகுடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வட்டார, மாவட்ட, மாநில அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தோட்டக்கலை பயிா்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்குவிக்கவும், தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் விதமாகவும் தோட்டக்கலைத் துறையில் நடப்பாண்டு முதல் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காய்கறிகள், மலா்கள், சுவை தாளிதப் பயிா்கள் (மசாலாப் பயிா்கள்), மூலிகை மற்றும் வாசனை திரவியப் பயிா்கள், மலைப் பயிா்கள் சாகுபடி, நுண்ணீா் பாசன தொழில்நுட்ப பயன்பாடு, உயா்தொழில்நுட்ப பயன்பாடு, இயற்கை முறை விவசாயம், புதிய மற்றும் தனித்துவமிக்க பயிா்கள் சாகுபடி என்று 10 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது: சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் தோட்டக்கலைத் துறை சாா்பில் வழங்கப்படும் சிறந்த விவசாயி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருது பெறுவதற்கு இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து, ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

