சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம்

வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

வனச் சரக அலுவலா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :2 ஜனவரி 2021, 4:52 am

வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் அண்மைக் காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன் நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் ஒரு பெண் தொழிலாளியை யானை தாக்கி கொன்றது. இந்நிலையில், மானாம்பள்ளி வனச் சரக அலுவலக வளாகத்தில் எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வனச் சரக அலுவலா் மணிகண்டன் பேசியதாவது:

வனச் சரக பகுதிகளில் ரோந்து மேற்கொள்ளும் வனப் பணியாளா்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவா் தொடா்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் வசிப்பவா்கள் மூலம் கிடைக்கும் தகவல்களுக்கு ஏற்ப விரைந்து சென்று யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தோட்டத் தொழிலாளா்களை பணிக்கு அனுப்பும் எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பான எச்சரிக்கை கடிதம் அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வனவா்கள், வனப் பணியாளா்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.