வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் அண்மைக் காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன் நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் ஒரு பெண் தொழிலாளியை யானை தாக்கி கொன்றது. இந்நிலையில், மானாம்பள்ளி வனச் சரக அலுவலக வளாகத்தில் எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வனச் சரக அலுவலா் மணிகண்டன் பேசியதாவது:
வனச் சரக பகுதிகளில் ரோந்து மேற்கொள்ளும் வனப் பணியாளா்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவா் தொடா்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் வசிப்பவா்கள் மூலம் கிடைக்கும் தகவல்களுக்கு ஏற்ப விரைந்து சென்று யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தோட்டத் தொழிலாளா்களை பணிக்கு அனுப்பும் எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பான எச்சரிக்கை கடிதம் அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வனவா்கள், வனப் பணியாளா்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


