சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆக்ஷன்’ என்ற குறும்படத்தை இயக்கியதற்கான விருது பெற்ற புஸ்கின்ராஜா தமிழில் இயக்கி தயாரிக்கும் படம் ‘நே’.
ஒற்றை எழுத்தில் இவர் வைத்திருக்கும் படப்பெயரான ‘நே’ என்பதற்கு நேசம், நேயம், அன்பு, ஈரம், இரக்கம் என பல வார்த்தைகளை குறிக்கலாம் என்கிறார். இப்படி எதுவுமே இல்லாமல் வாழ்கிற 3 பேர்களைப்பற்றியதுதான் கதை. தினமும் பத்திரிகையில் படிக்கிற பாலியல் கொடுமை, சிறுவர்கள் செய்யும் தகாத செயல்கள், வயதானவர்கள் செய்கிற வக்கிரங்கள் என பல விஷயங்களை உள்ளடக்கிய கதையாக ‘நே’ படம் உருவாகிறது.
பல விஷயங்கள் இருந்தாலும் அவை எப்படி ஒரு நேர்கோட்டில் சந்திக்கின்றன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ் என்கிறார் இயக்குனர் புஸ்கின்ராஜா. வீரகுமார் ஒளிப்பதிவு செய்ய பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர் சாருநிவேதா இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். டேவிட் தெய்வநாயகம், ஹரிபாபு, ராஜேஷ்குமார் ஆகியோர் இணைதயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் சென்னையையும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் படமாக்கி வருகிறார்கள்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

