சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இருவரை வெளியேற்றக் கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் செயலாளராக இருந்த ரவிராஜா மற்றும் துணைச் செயலாளராக இருந்த ஏ.சி. குமார் ஆகிய இருவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நீக்கப்பட்ட இருவரும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் பல ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தார்கள். இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டதால் இருவரும் வீட்டைக் காலி செய்யும்படி விஜய் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டைக் காலி செய்யாமல் இருந்துள்ளார்கள்.
இதையடுத்து, தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் ரவிராஜா, குமார் ஆகிய இருவரையும் வெளியேற்றக் கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


