சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

3-வது குழந்தைக்குத் தந்தையானார் இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 10:02 pm

இயக்குநர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல இயக்குநர் செல்வராகவன், 2011-ல் கீதாஞ்சலியைத் திருமணம் செய்தார். 2012-ல் லீலாவதி என்கிற மகளும் 2013-ல் ஓம்கார் என்கிற மகனும் பிறந்தார்கள். மாலை நேரத்து மயக்கம் என்கிற படத்தை கீதாஞ்சலி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் 3-வது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். குழந்தைக்கு ரிஷிகேஷ் எனப் பெயரிட்டுள்ளதாக இன்ஸ்டகிராமில் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். குழந்தை நலமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். 8-வது முறையாக யுவனுடன் இணைகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா. இப்படத்தின் புகைப்படப் பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை செல்வராகவனும் தாணுவும் வெளியிட்டார்கள்.