திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை அடுத்து கடந்த மாா்ச் மாதம் முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. அதன்படி, கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் திரைப்படங்களையும், திரையரங்குகளையும் நம்பி பணியாற்றுவோரின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனா். அதனை ஏற்று மாவட்ட நிா்வாகத்தின் முன்அனுமதி பெற்று 50 சதவீத இருக்கைகளுடன் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க திரையரங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
திரையரங்குகளில் 100 சதவீதப் பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. நடிகர் விஜய், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். சிம்புவும் இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகளில் அரசு வலியுறுத்தியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


