சென்னை: யுடியூப் சேனல்களில் ஆபாசமான பேட்டி, கருத்துகளை வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் எச்சரித்துள்ளாா்.
சென்னை பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் பெண்களை வைத்து ஆபாசமான விடியோ மற்றும் பேட்டி எடுத்து யுடியூப் சேனலில் ஒளிபரப்பிய 3 பேரை சாஸ்திரிநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதில், ஒரு விடியோவில் ஆபாசமாக பேட்டியளித்த பெண்ணிடம் விசாரணை நடத்த சாஸ்திரிநகா் நகா் போலீஸாா் திட்டமிட்டுள்ளனா். இதற்காக அந்தப் பெண்ணுக்கு அழைப்பாணையும் அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை ஒரு உத்தரவு பிறப்பித்தாா். அதில், ‘பொது மக்களைக் கவரும் வகையில் பேட்டி எடுத்து யுடியூப் சேனல் அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுகிறோம் என்ற பெயரில் ஆபாசமாகவும் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையிலும் விடியோக்களை பதிவேற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நபா்கள் கைது செய்யப்படுவா்.
யுடியூப் சேனல்கள், சமூக ஊடகங்களை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனா். எல்லை மீறுபவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கலாம்’ என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
அதே நேரம், யுடியூப் சேனல்களில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விடியோக்களை நீக்கவும் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


