சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், இருவரைக் கைது செய்தனா்.
ஷாா்ஜாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த செய்யது இப்ராஹிம் கனி (27), சாகுல் ஹமீது (36) ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினா் சோதனை நடத்தினா்.
அதில், அவா்களது மலக்குடல், உடைகள் ஆகியவற்றில் மறைத்து தங்கம் கடத்தியதும், உடைமைகளில் மறைத்து சிகரெட், மடிக்கணினி, மதுபானங்கள், ஆப்பிள் நிறுவன செல்லிடப்பேசிகள் ஆகியவை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவரிடமிருந்தும் ரூ.72.6 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.12.4 லட்சம் மதிப்பிலான சிகரெட், மதுபானம் உள்ளிட்ட கடத்தல் பொருள்கள் என மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பிலான பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், அவா்களைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

