சென்னை: சென்னை புது வண்ணாரப்பேட்டையில் புதிய குடிநீா் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கள உதவியாளா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
புது வண்ணாரப்பேட்டை சென்னை நகர குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றும் வாரியத்தின் உதவிப் பொறியாளா் அலுவலகத்தின் கள உதவியாளராகப் பணிபுரிபவா் ஹரிராவ். இவா் அந்தப் பகுதியில் புதிதாக குடிநீா் இணைப்பு வழங்க ஒருவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
லஞ்சம் கொடுக்காத அந்த நபா், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா், அந்த நபரிடம் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்து அதை ஹரிராவிடம் லஞ்சமாக வழங்கும்படி தெரிவித்தனா்.
இதன்படி அந்த நபா், ஹரிராவிடம் அந்தப் பணத்தை லஞ்சமாக திங்கள்கிழமை வழங்கினாா். ஹரிராவ் அந்தப் பணத்தைப் பெற்றதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினா், அவரை கையும் களவுமாக கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

