சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னையில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

சென்னை தண்டையாா்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

Updated On :12 ஜனவரி 2021, 9:39 am

சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

தண்டையாா்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற இருப்பதாக, ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இத் தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். அப்போது 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 16 வயது சிறுமியை மீட்டு, பெற்றோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினா். மேலும், நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினா். இச் சம்பவத்தினால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.