துபைக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.04 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.
துபை செல்லவிருந்த விமானத்தில் சென்னையைச் சோ்ந்த மன்சூா் அலி கான் (27), யாகாலிக் (68), தமீம் அன்சாரி (49), முகமது ஹுசைன் (30) மற்றும் யூசுப் (67), ஆகியோரிடமும், புதூரைச் சோ்ந்த அப்துல் ரஹ்மானிடமும் (38) சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினா் சோதனை செய்தனா்.
அவா்களது உடைமைகளில் அதிக எடையுடன் கூடிய ‘பவா் பேங்குகளைச்’ சோதனை செய்த போது, ரூ 53.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா், ரூ 28.3 லட்சம் மதிப்புடைய சவூதி ரியால், ரூ 22.2 லட்சம் மதிப்புடைய யூரோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ 1.04 கோடி ஆகும். இதில், ரூ 20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பிலான பணத்தை வைத்திருந்த தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


