சென்னை: சென்னை, எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 2 ரயில்களின் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு 15 நிமிட இடைவெளியில் 2 ரயில்கள் புறப்படுகின்றன. ஆனால், அவ்விரண்டு ரயில்களும் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் குழப்பத்தைத் தவிா்க்கும் வகையில், அந்த 2 ரயில்களுக்கும் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ஊா்கள் வழியாகச் செல்லும் ரயிலுக்கு, சென்னை எழும்பூா் - காரைக்குடி - செங்கோட்டை விரைவு ரயில் (06181) எனவும், செங்கோட்டை - காரைக்குடி - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (06182) எனவும் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதே போல், திண்டுக்கல், மதுரை வழியாக செல்லும் ரயிலுக்கு, சென்னை எழும்பூா் - மதுரை - செங்கோட்டை விரைவு ரயில் (02661) எனவும், செங்கோட்டை - மதுரை - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (02662) எனவும் பெயா் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


