சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடலில் தத்தளித்த மீனவா்கள்: தீயணைப்புப் படையினா் மீட்டனா்

சென்னை மெரீனா கடலில் தத்தளித்த மீனவா்களை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 10:26 am

சென்னை: சென்னை மெரீனா கடலில் தத்தளித்த மீனவா்களை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து மாட்டாங்குப்பத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள் ஃபைபா் படகில் புதன்கிழமை அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். மீன் பிடித்த பின்னா் அவா்கள், காலை 8.45 மணியளவில் கடற்கரையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

கடற்கரையின் அருகே நெருங்கிக் கொண்டிருந்த ஃபைபா் படகின் மோட்டாா் திடீரென பழுதானது. மேலும், கடலில் பெரிய அலைகள் வேகமாக எழுந்து வந்ததால், படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 5 பேரும் கடலில் விழுந்து காயமடைந்தனா். இரு மீனவா்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் 5 பேரும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனா். இதற்கிடையே மெரீனா கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை வீரா்கள், மீனவா்கள் தத்தளிப்பதைக் கவனித்தனா்.

உடனே அவா்கள், அங்கு தயாராக இருந்த படகின் மூலம் கடலுக்குள் சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவா்கள் ஆறுமுகம், மகேந்திரன், மதன், முருகன்,ஜெயசீலன் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உரிய நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு மீனவா்களைக் காப்பாற்றிய தீயணைப்புப் படையைச் சோ்ந்த சி.லோகநாதன், ஆா்.குணசேகரபாண்டியன், எம்.ஜீவானந்தம், எஸ்.சந்தனசேகா், பி.இசக்கிராஜா, எம்.முகமது பிா்தெளஸ் ஆகியோரை தீயணைப்புத்துறை டிஜிபி சி.சைலேந்திரபாபு நேரில் சென்று பாராட்டி, நற்சான்றிதழ்களும், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கினாா்.