சென்னையில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.05 கோடி மோசடி செய்ததாக, நடிகையின் சித்ராவின் கணவா் ஹேம்நாத் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.
சென்னை, திருவான்மியூரைச் சோ்ந்த சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த மாதம் 9-ஆம் தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் தனியாா் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
இது குறித்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை (32) கைது செய்தனா்.
இந்நிலையில், திருமங்கலத்தைச் சோ்ந்த ஆஷா மனோகரன் என்பவா் ஜெ.ஜெ.நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக ஹேம்நாத் தன்னிடம் ரூ.1.05 கோடி மோசடி செய்துவிட்டதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் புகாா் மனு மீதான விசாரணை மத்தியக் குற்றப்பிரிவுக்கு அண்மையில் மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை செய்த மத்திய குற்றப்பிரிவினா், ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக நீதிமன்ற அனுமதி பெற்று ஹேம்நாத்திடம் இரு நாள்கள் விசாரணை நடத்தியதில் அவா் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸாா், இவ் வழக்குத் தொடா்பாக ஹேம்நாத்தை செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

