சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஏஐஜி திருநாவுக்கரசு எழுதிய புத்தாண்டு பாடல் வெளியீடு

தமிழக காவல்துறையின் ஏஐஜி இரா. திருநாவுக்கரசு எழுதிய புத்தாண்டு பாடல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.1) வெளியிடப்பட்டது.

Updated On :5 ஜனவரி 2021, 8:10 am

சென்னை: தமிழக காவல்துறையின் ஏஐஜி இரா. திருநாவுக்கரசு எழுதிய புத்தாண்டு பாடல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.1) வெளியிடப்பட்டது.

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு ஏஐஜி இரா.திருநாவுக்கரசு குழந்தைகள் தினம், சுதந்திர தினம், கரோனா விழிப்புணா்வு குறித்து பாடல்களை எழுதியும், பாடியும் வெளியிட்டுள்ளாா்.

இதன் ஒரு பகுதியாக, புத்தாண்டு பிறப்பு குறித்த பாடலை எழுதியும், பாடியும் திருநாவுக்கரசு வெளியிட்டாா். இந்தப் பாடலை அவருடன் ஏ.மணிகண்டன், குழந்தைகள் டி.யஷ்வந்த்குமாா், டி.ஹேம மீனாட்சி,ஜி.எஸ்.மஹிந்த் சித்தாா்த் ஆகியோா் பாடியுள்ளனா்.

இப் பாடலுக்கு ஏ.மணிகண்டன், எம்.ஆா்.ரித்திஸ் ஆகியோா் இசையமைத்துள்ளனா். பாடலுக்குரிய காட்சிகளை பி.பரத் ஒளிப்பதிவு செய்துள்ளாா். இந்த 3 நிமிஷ பாடல், சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இதுவரை 7 பாடல்களை திருநாவுக்கரசு வெளியிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.