சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் இதுவரை நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 125-ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கடந்த 15 நாள்களாக விடுதிகளுக்கு வந்து சென்ற விருந்தினா்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அடுத்த சில நாள்களுக்கு அந்த விடுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் கடந்த டிசம்பா் மாதம் 15-ஆம்தேதி அங்கு பணிபுரியும் ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அங்கு பணியாற்றும் பலருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் ஊழியா்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதில் ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் மட்டும் திங்கள்கிழமை வரை 97 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னை எம்.ஆா்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலிலும் இதுவரை 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவ்விரு ஹோட்டல்களிலும் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவா்களைக் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


