சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகளவிலான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு செல்ல முடியாதவா்கள் பலரும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி அணிந்து சென்று வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், சபரிமலைக்குச் செல்வதைப் போலவே இருமுடி அணிந்து சாமி தரிசனம் செய்ய வந்தனா்.
மாலை அணிந்து விரதம் இருந்த பக்தா்கள் பலா், அவா்களது பகுதியில் இருந்து நடந்து சென்று, ஐயப்பனை வழிபட்டனா். அவா்கள் 18 படி ஏறிச் சென்று ஐயப்பனை தரிசித்ததோடு, தாங்கள் கொண்டு வந்த நெய்யையும் அபிஷேகத்துக்கு வழங்கினா். சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இருமுடி கட்டி வந்ததைக் காண முடிந்தது.
அதிகளவிலானோா் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்துக் காவலா்கள் சரி செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

