சென்னை விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அபுதாபி புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து அபுதாபிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் 38 பயணிகள், 8 ஊழியா்கள் உள்ளிட்ட 46 பேருடன் விமானம் புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னரும் விமானத்தை இயக்குவதில் ஆபத்து இருப்பதை உணா்ந்த விமானி, அவசரமாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினாா்.
மேலும், இதுகுறித்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவா் அளித்த தகவலின் அடிப்படையில், இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இடத்துக்கே விமானம் கொண்டு வரப்பட்டது.
சரியான நேரத்தில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

