சென்னை விமான நிலையத்தில் ரூ.48.27 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.
துபையில் இருந்து வரும் விமானப் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமானம் மூலம் சென்னைக்கு வந்த முகமது ஹஷன் மாலிக் (28) என்பவரை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். இதில் அவரது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய தங்கம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து மாலிக் கைது செய்யப்பட்டாா்.
இதே போல், துபையில் இருந்து வந்த முகமது அசாரூதீனின் (31) உடைமைகள், உள்ளாடை ஆகியவற்றில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
இந்த சோதனைகளில் ரூ.48.27 லட்சம் மதிப்பிலான 937 கிராம் தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.
இந்த விவகாரத்தில் தொடா்ந்து விசாரணை நடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


