சென்னையில் இரு வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளர்கள் இறந்தனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் உபுதாஸ் (26). இவர் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிறுவனம் அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் புதிய வீடுகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டு
வருகிறது.
இந்தப் பணியில் தாஸýம் ஈடுபட்டிருந்தார். கட்டடத்தின் அஸ்திவாரம் அமைப்பதற்காக செவ்வாய்க்கிழமை அங்கு பெரிய குழிகள் தோண்டப்பட்டன. அன்று இரவு பலத்த மழை பெய்ததால், குழியில் தண்ணீர் தேங்கியதாம்.
அந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக தாஸ், மோட்டாரை இயக்கினார். அப்போது அந்த மின் மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவினால், தாஸ் மீது மின்சாரம் பாய்ந்தது.
பலத்த காயமடைந்த தாûஸ அங்கிருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தாஸ் இறந்தார்.
வேளச்சேரியில் மற்றொரு சம்பவம்: வேளச்சேரி பரமேஸ்வரன் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார். தரமணி பாரதிநகரில் 100 அடி சாலையில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மின்சார வயரை தொட்டதாகத் தெரிகிறது.
இதில் சிவகுமார் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

