நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சர்வதேச மின் விளக்கு கண்காட்சியை ஆளுநர் கே. ரோசய்யா, வெள்ளிக்கிழமை (செப். 13) தொடங்கி வைக்கிறார்.
வரும் 16-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு "லைட் இந்தியா இன்டர்நேஷனல் 2013' என்று பெயரிடப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மாநிலங்களவை உறுப்பினர் என். பாலகங்கா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ஐ.டி.பி.ஓ.), தொழில், வர்த்தகத் துறை, மின்விளக்கு பொறியாளர்கள் கழகம் (ஐ.எஸ்.எல்.இ.) போன்ற அரசு சார்பு நிறுவனங்கள் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.
மின்விளக்கு பொறியாளர்கள் கழகம் சார்பில் தில்லி, மும்பை, இந்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில் மின்விளக்கு கண்காட்சி ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 150 மின்விளக்கு உற்பத்தி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன. சீனா, ஜெர்மனி, தைவான், இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்க இருப்பதாக கண்காட்சியின் தலைவர் திலீப் கும்பத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

