சென்னை கே.கே.நகர். கிண்டி, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் புறநகர் பகுதிகளில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், பரங்கிமலை, பெருங்குடி, மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிளும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டனர். தேங்கிய தண்ணீரை உடனுக்கு உடன் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கம் தெற்கு ராம் நகரில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. உள்ளகரம் மேடவாக்கம் சாலையில் இருந்து மடிப்பாக்கம் வரை உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு ராம்நகர், சீனிவாசன் நகர், பாகீரதி நகர் பகுதிகளில் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
புழுதிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்த மரம் விழுந்தது. இதனால் அங்குள்ள மின்சார வயர்கள் அறுந்தன. உடனே அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.
பெருங்குடி பகுதியில் கந்தன்சாவடி, திருவேங்கடம் நகர், கோதண்டராமன் நகர், மாருதி நகர், சரவணா நகர், அண்ணா நெடுஞ்சாலை, மயான சாலை, கல்லுக்குட்டை பகுதி. டெலிபோன்ஸ் நகர் உள்பட பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இந்த பகுதிகளில் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


