கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இந்த ஆண்டுக்கான இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறக்கட்டளை சார்பில் சென்னையில் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் இசைக் கச்சேரியையும் அவர் வழங்குவார்.
சிறந்த இசைக் கச்சேரிகளை வழங்கியதற்காகவும், பாரம்பரிய இசை வடிவத்துடனேயே பாடுவதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள மியூசிக் அகாதெமியில் விருது வழங்கும் விழா, இசைக் கச்சேரி ஆகியவை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் என இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் மல்லிகா ஸ்ரீனிவாசன், மியூசிக் அகாதெமியின் தலைவர் என். முரளி ஆகியோர் தெரிவித்தனர். அமால்கமேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.சிவசைலத்தின் மனைவி இந்திரா சிவசைலம் நினைவாக இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


