சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக 19 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இதனால் சென்னை முழுவதும் பல இடங்களில் 19 இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகள் சாலையில் விழுந்தன. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
ராயபுரம் சூரிய நாராயணன் சாலை, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை, புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலை, கீழ்ப்பாக்கம் லட்சுமிபதி சாலை, சுப்பிரமணி தெரு, வில்லிவாக்கம் சிவன் கோயில் மேற்கு மாட வீதி, ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி, நந்தனம் லோட்டஸ் காலனி, அசோக் நகர், அண்ணா பிரதான சாலை, கே.கே. நகர் பாரதிதாசன் காலனி, பி.டி. ராஜன் சாலை, கோடம்பாக்கம் அக்பராபாத் 2-வது தெரு, எம்.ஆர்.சி. நகர் வசந்த அவென்யு, ரோகிணி கார்டன், கோட்டூர்புரம் நாயுடு தெரு, 16-ஆவது அவென்யு இந்திரா நகர், திருவான்மியூர் தெற்கு அவென்யு, 4-வது சி வார்டு சாலை ஆகிய பகுதிகளில் மரங்கள் விழுந்தன.
அண்ணாநகர் 13-வது பிரதான சாலையில் மரக்கிளை சாலையில் விழுந்தது. இவை அனைத்தும் மாநகராட்சி பணியாளர்களால் உடனடியாக அகற்றப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


