சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சிப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 7:07 am

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சிப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

ராணுவ பயிற்சிப் பள்ளியில் ராணுவ வீரர்கள் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராமல் ஏணி அருகிலிருந்த மின்சார கம்பியில் பட்டது. இதில் இமாசலப் பிரதேசம், பதேபூர் மாவட்டம் குர் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் டர்சிம் சிங், உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், கோக்னா கிராமத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் மன்வர் சிங் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜூலை 17-ஆம் தேதி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஹவில்தார் சுஷில்சிங், நாயக் ராஜேந்திரசிங் ஆகியோர் காயமடைந்தனர்.

தடுப்பணை சுற்றுச்சுவர் விபத்து:சேலம் மாவட்டம் வேப்பிலைப்பட்டி கிராமம் வெள்ளாள குண்டம் காப்புக்காடு அருகே வனக்காவலர் முருகன் தடுப்பணை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெள்ளாளகுண்டம் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த தேவகி என்பவர் காயமடைந்தார்.

சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்த விபத்தில் உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த தேவகி மற்றும் சுஷில்சிங், ராஜேந்திர சிங் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்