சென்னையில் சாலையில் குப்பையை கொட்டிய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக லாரிடிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்
வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. எம்.கே.பி.நகர் காட்டன் கால்வாயில் சேகரிக்கப்படும் கழிவு குப்பைகளை சிலர் பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே கொட்டி வந்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதால் வாகன விபத்து ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இந்தப் பகுதியில் 5 லாரிகளில் கொண்டு வரப்பட்ட மணல், குப்பைகள் கொட்டப்பட்டன. தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி ஆய்வு நடத்தினர்.
அதிகாரிகள் வருவதற்குள் 2 லாரிகள் குப்பைகளை கொட்டிவிட்டு சென்று விட்டது. எஞ்சிய 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி டிரைவர்கள், கிளீனர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் வியாசர்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

